9 பிப்ரவரி, 2013

அயல்நாட்டு அடிமை

அயல்நாடு வந்த அடிமை நான்
அடையாளம் தொலைத்த அகதியும் நான்

விரும்பித்தான் விலை போனேன்
அடிமாடாய் அயல்நாட்டில்

உயர்ந்து நிற்க்குது கட்டிடங்கள்
மனிதர்கள் மனத்தில் வெற்றிடங்கள்

லட்சம் மட்டுமே லட்சியமாய்
வாழ்க்கைப் போகும் அவலங்கள்

தஞ்சம் புகுந்த காரணத்தால்
தன்மானம் இழந்த நெஞ்சங்கள்

புழுங்கித் தவித்த பொழுதுகளை..
என் தலையனை கூறும் கண்ணீர் கதை

வெகுண்டு திரும்பிட நினைக்கையிலே
மனக்கண்ணில் விரிந்திடும் சொந்தங்கள்

கண்ணீர் துடைத்து கிளம்பிடுவேன்
எனக்காய் கடமை காத்திருக்கென