கடன் தீர்க்க..
கடமைகள் கொண்டு
கனவுகள் சுமந்து
கடல் கடந்து..கரை புகுந்தாய்
கடன் தீர்ந்தால் போதும்
-இது அன்றைய கனவு
கடன் தீர்த்தாய்
நேற்று
குருவிக்கூடாய் சிறு வீடு
-இது நேற்றைய கனவு
கடல் போல் வீடு
இன்று
கைக்கடக்கமாய் வங்கியிருப்பு
-இது இன்றைய கனவு
கனவு களைந்ததாய் இல்லை
என்றும்
விழித்தெழு.. கனவு களைத்தெழு
உன் தேவை.. தாயகத்திற்க்கும்
உன் தாயிற்க்கும்
தேவையென்றுணர்ந்து
திரும்பிடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக