கண்கள் உன்னை காணும் போது
காதல் வந்தது ஏனோ
கண்கள் வழியே காதல் சொன்னது
உந்தன் இதயம் தானோ
கண்கள் மூடி தூங்கும் போதும்
உந்தன் பிம்பம் ஏனோ
என்னில் உன்னை தேடித்.. தேடி
தொலைந்து போவேனோ..
காதல் என்னை ஆட்டுவிக்கும்
நூலில் பொம்மை நானோ
கண்ணில் என்னை பூட்டி வைக்கும்
தங்கச் சங்கிலி நீயோ
கண்கள் எல்லாம் பேசிடும் என்பதால்
இதழ்கள் திறப்பதில்லையோ
இதழ்கள் பேச விளையும் போது
கண்கள் மூடுதல் முறையோ
ஆப்பிள் கொண்டு காதல் சொன்னான்
ஆதாம் ஏவாளிடம் அன்று
ஏவாளாய் நீ வந்தால்... புதிய
உலகம் படைக்கலாம்.. இன்று
அன்பில் ஓர் உலகம் படைப்போம்..
அறிவினால் மட்டும் அல்ல..
அறிவி(ய)ல் படைத்த உலகம் இங்கு
அழிந்து வருகுது மெல்ல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக