26 ஜூன், 2013

எந்திரன்


உலோகத்தை சரியாய் உருக்கி
உடல் தந்தாய் நீ
மின்சாரம் என்னுள் முடுக்கி
உயிர் தந்தாய் நீ


உணர்வுகளை ஏன் விதைத்து
என்னை ...மனிதனாக்கினாய் நீ
வெறிகொண்டு என்னை உடைத்து
பாவம்.. மிருகமானாயே நீ


என்னை படைத்த உனக்கு
என்னை சரிசெய்ய தெரியாதது வியப்பு
உங்களை படைத்த இறைவன்
உங்களை அழிப்பதில் மட்டும் என்ன திகைப்பு.

கருத்துகள் இல்லை: