26 ஜூன், 2013

காதலர் தினம்


இதயக் கொள்ளையர் ஒன்றாய் கூடி
இதயம் பகிர்ந்திடும் நாள் அது

வார்த்தைகள் இல்லா வரிகள் கொண்டு
மெளனம் பேசிடும் புதுமொழி அன்று

பச்சை மஞ்சள் சிகப்பு என்று
வண்ணங்கள் சொல்லும் எண்ணங்கள் அன்று

இறக்கை முளைத்த பறவை போலே
இதயம் பறந்திடும் வானம் மேலே

கோயில்கள் எங்கும் பிரார்த்தனை முழங்கும்
கடவுளுக்கும் கூட அன்று செவி வலிக்கும்

கருத்துகள் இல்லை: