இதயக் கொள்ளையர் ஒன்றாய் கூடி
இதயம் பகிர்ந்திடும் நாள் அது
வார்த்தைகள் இல்லா வரிகள் கொண்டு
மெளனம் பேசிடும் புதுமொழி அன்று
பச்சை மஞ்சள் சிகப்பு என்று
வண்ணங்கள் சொல்லும் எண்ணங்கள் அன்று
இறக்கை முளைத்த பறவை போலே
இதயம் பறந்திடும் வானம் மேலே
கோயில்கள் எங்கும் பிரார்த்தனை முழங்கும்
கடவுளுக்கும் கூட அன்று செவி வலிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக