26 ஜூன், 2013

கலங்குதடி சித்தம்


தலை கோதி நீ தந்த முத்தம்
ஈரம் காய்ந்த பின்னும் என்னோடு சுற்றும்

 காதோரம் உன் சிரிப்புச் சத்தம்
என்னுள் கேட்குதடி நித்தம்

எத்தனை எத்தனை அன்பு யுத்தம்
நினைத்தாலும் குளுருதடி இரத்தம்

என்னை மறந்து... மரித்துப் போனாயடி நீ
கலங்காதிருக்குமா என் சித்தம்...

கருத்துகள் இல்லை: